உலகம்
விசா கேட்ட பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட அதிகாரி.. நியூயார்க் இந்திய துணைத் தூதரகத்தில் நடந்தது என்ன?
நியூயார்க்கில் இந்தியத் துணைத் தூதரகம் உள்ளது. இங்கு கடந்த நவம்பர் மாதம் இந்தியப் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர், இந்தியாவில் இருக்கும் தனது தந்தை இறந்துவிட்டார் என கூறி விசா விண்ணப்பித்துள்ளார்.
பின்னர் தூதரகத்தில் இருந்த அதிகாரியிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அப்போது அதிகாரி அந்த பெண்ணிடம் கோபமாக நடந்து கொண்டார். மேலும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் படி ஆவேசமாக கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அந்தப் பெண், தங்களின் ஆவணங்களில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என அதிகாரியிடம் கேட்டனர். இதற்கு அவர் எதற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டு எழுந்து அறைக்கு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணுடன் வந்த கணவர் வீடியோ எடுத்துள்ளார். இதை தங்களின் சமூக வலைத்தளங்களில் இருவரும் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை அறிந்த இந்தியத் துணைத் தூதரகம் இது குறித்து விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!