உலகம்
300க்கும் மேற்பட்ட யானைகள் இறந்ததற்கு இதுதான் காரணமா? - வெளியான அதிர்ச்சி தகவல்!
போட்ஸ்வானாவில் 1,30,000 ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. வேறு எந்த கண்டத்திலும் நாட்டிலும் இருப்பதை விட அங்குதான் அதிகம். போட்ஸ்வானா அரசு 2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த யானை வேட்டைத் தடையை கடந்த ஆண்டு முதல் ரத்து செய்தது. இது சர்வதேச அளவில் எதிர்ப்பைச் சந்தித்தது.
இந்நிலையில், சில மாதங்களில் 300க்கும் மேற்பட்ட யானைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று மாத காலகட்டத்தில் நிகழ்ந்த யானை இறப்புகள், அவற்றின் காரணம் அனைத்தும் ஆரம்பத்தில் ஒரு மர்மமாகவே இருந்தது; இறப்புகள் குறித்து ஊகங்கள் அதிகரித்ததால், யானையின் சடலம், மண் மற்றும் நீர் மாதிரிகள் மீது ஆய்வக சோதனைகளை மேற்கொள்ள போட்ஸ்வானா அரசு உத்தரவிட்டது.
எனவே ஆப்ரிக்காவின் தெற்குப்பகுதியில் உள்ள போட்ஸ்வானாவில் 300க்கும் மேற்பட்ட யானைகள் நீர்நிலைகளில் நச்சு உற்பத்தி செய்யும் சயனோபாக்டீரியாவால் கொல்லப்பட்டுள்ளன என்று அரசு வனவிலங்கு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஆனால் அந்த விளக்கம் சில பாதுகாவலர்களைத் திருப்திப்படுத்தவில்லை.
”சயனோபாக்டீரியா வழக்கமாக நீரில் காணப்படுகிறது, ஆனால் அவை அனைத்தும் நச்சுகளை உருவாக்குவதில்லை. நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் பாக்டீரியா வளர நிலைமை மிகவும் சாதகமாக மாறும்போதும் பாக்டீரியா அதிக நச்சுகளை உற்பத்தி செய்கிறது ” என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!