உலகம்
பாதிப்பு குறைந்த நாடுகளில் மீண்டும் அதிகரித்த தொடங்கிய கொரோனா தொற்று : உலக நாடுகளைச் சிதைக்கும் கொரோனா!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 28,328,080 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 913,918 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,588,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 196,328 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேப்போல், இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த இந்தியா 2வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,562,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 4,562,414 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து, பிரேசில் - 4,239,763, ரஷ்யா - 1,046,370, பெரு - 710,067 , கொலம்பியா - 694,664, மெக்சிகோ - 652,364, தென் ஆப்பிரிக்கா - 644,438, ஸ்பெயின் - 554,143, அர்ஜண்டினா - 524,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளை தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இன்னும் அதிகரித்து கொண்டே செல்வதாகவும், இருப்பினும் உலகளவில் தொற்றால் உயிரிழப்புகள் குறைந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!