உலகம்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை மாயம் - கொல்லப்பட்டாரா எனக் கிளம்பும் சந்தேகம்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் பொது வெளியில் தோன்றி பல நாட்கள் ஆவதால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பிள்ளது.
சமீபத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை சரியில்லாமல் கோமா நிலைக்கு சென்றுள்ளார் எனவும், இதனால் அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனால் அதன் பின் அரசு அதிகாரிகளுடன் கிம் ஜாங் உன் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருக்கும் புகைப்படத்தை வடகொரிய அரசாங்கம் வெளியிட்டது.
இந்த வதந்திகளைப் பொய்யாக்கும் வகையில் பொதுவெளியில் ஜாங் தோன்றாமல் இருக்கிறார் எனவும் தென் கொரிய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்பாக அரசு விழா ஒன்றில் அவரது சகோதரருடன் கிம் யோ ஜாங் தோன்றினார்.
இதற்கு முன்பாக யாராவது அதிபருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் எனக் குறிப்பிடப்பட்டால் உடனே அவரது பதவி பறிக்கப்படும் அல்லது அவர் மரணமடைவார் என்பதே வரலாறு. கிம் ஜாங் உன்னின் சகோதரரும் வட கொரிய அதிபர் நாற்காலிக்கு போட்டியாகக் கருதப்பட்டவருமானவர் பல ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் வெளியிட்டுள்ள கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தில் அவருக்கு அருகில் அவரது தங்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எந்த அதிகாரப்பூர்வ புகைப்படங்களிலும் சமீபகாலமாக அவர் இடம்பெறவில்லை என்பது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
Also Read
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்