உலகம்
“பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்” : வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த வட கொரிய ஊடகம்!
வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட விளைவால் இந்த மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து ஏராளமான வதந்திகள் பரவியது.
குறிப்பாக, கிம் ஜாங் உன்-னின் உடல்நிலை மோசமாகவிட்டதாக அமெரிக்கா ஊடங்கள் செய்தியை வெளியிட அது தீயாய் உலக நாடுகளுக்குப் பரவியது. பின்னர் ஒருகட்டத்தில் அவர் இறந்தேப் போய்விட்டதாகவும் இறந்த செய்தியை அந்நாட்டு அரசு மறைத்துவிட்டதாக பல்வேறு கட்டுக் கதைகளை சில குறிப்பிட்ட ஊடங்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தது.
இதனிடையே கிம் ஜாங் உன்னுக்கு எதுவும் ஆகவில்லை என அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தென் கொரியா உயர் அதிகாரிகள் அந்த வந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தனர். இந்நிலையில், கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் கிம் ஜாங் உன் தோன்றியதாக வட கொரியா அரசு ஊடகமே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்ட தகவலின் படி, து நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன் உட தொழிற்சாலை ஒன்றினை தொடங்கிவைத்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கிம் ஜாங் உன் ஒரு தொழிற்சாலையினை தொடங்கி வைக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. வட கொரியா மூத்த அதிகாரிகள் மற்றும் அவர் தங்கையான கிம் யோ ஜாங் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கிம் கலந்து கொண்டார். இந்த செய்தி கிம் ஜாங் பற்றிய வதந்திக்கு பதிலடி எனக் கூறப்படுகிறது.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!