உலகம்
“பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்” : வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த வட கொரிய ஊடகம்!
வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட விளைவால் இந்த மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து ஏராளமான வதந்திகள் பரவியது.
குறிப்பாக, கிம் ஜாங் உன்-னின் உடல்நிலை மோசமாகவிட்டதாக அமெரிக்கா ஊடங்கள் செய்தியை வெளியிட அது தீயாய் உலக நாடுகளுக்குப் பரவியது. பின்னர் ஒருகட்டத்தில் அவர் இறந்தேப் போய்விட்டதாகவும் இறந்த செய்தியை அந்நாட்டு அரசு மறைத்துவிட்டதாக பல்வேறு கட்டுக் கதைகளை சில குறிப்பிட்ட ஊடங்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தது.
இதனிடையே கிம் ஜாங் உன்னுக்கு எதுவும் ஆகவில்லை என அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தென் கொரியா உயர் அதிகாரிகள் அந்த வந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தனர். இந்நிலையில், கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் கிம் ஜாங் உன் தோன்றியதாக வட கொரியா அரசு ஊடகமே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்ட தகவலின் படி, து நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன் உட தொழிற்சாலை ஒன்றினை தொடங்கிவைத்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கிம் ஜாங் உன் ஒரு தொழிற்சாலையினை தொடங்கி வைக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. வட கொரியா மூத்த அதிகாரிகள் மற்றும் அவர் தங்கையான கிம் யோ ஜாங் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கிம் கலந்து கொண்டார். இந்த செய்தி கிம் ஜாங் பற்றிய வதந்திக்கு பதிலடி எனக் கூறப்படுகிறது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !