உலகம்
முகப்பு பக்கத்தில் கருப்பு மை பூசிய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் - பின்னணி என்ன?
போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என்ற இரு கட்டுரைகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.
இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் வீடுகளில் போலிஸார் சோதனை நடத்தினர். அரசின் முக்கிய விவரங்களை வெளியிட்டதால் தான் சோதனை நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ரகசிய கலாச்சாரம் உருவாகி வருவதாகவும் பத்திரிகை நிறுவனங்கள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் செய்தித்தாளின் முதல் பக்க செய்தியை கருப்பு மையால் பூசி மறைத்து வெளியிட்டன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.
Also Read
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!