உலகம்
முகப்பு பக்கத்தில் கருப்பு மை பூசிய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் - பின்னணி என்ன?
போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என்ற இரு கட்டுரைகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.
இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் வீடுகளில் போலிஸார் சோதனை நடத்தினர். அரசின் முக்கிய விவரங்களை வெளியிட்டதால் தான் சோதனை நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ரகசிய கலாச்சாரம் உருவாகி வருவதாகவும் பத்திரிகை நிறுவனங்கள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் செய்தித்தாளின் முதல் பக்க செய்தியை கருப்பு மையால் பூசி மறைத்து வெளியிட்டன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!