உலகம்
முகப்பு பக்கத்தில் கருப்பு மை பூசிய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் - பின்னணி என்ன?
போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என்ற இரு கட்டுரைகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.
இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் வீடுகளில் போலிஸார் சோதனை நடத்தினர். அரசின் முக்கிய விவரங்களை வெளியிட்டதால் தான் சோதனை நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ரகசிய கலாச்சாரம் உருவாகி வருவதாகவும் பத்திரிகை நிறுவனங்கள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் செய்தித்தாளின் முதல் பக்க செய்தியை கருப்பு மையால் பூசி மறைத்து வெளியிட்டன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!