உலகம்
முகப்பு பக்கத்தில் கருப்பு மை பூசிய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் - பின்னணி என்ன?
போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என்ற இரு கட்டுரைகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.
இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் வீடுகளில் போலிஸார் சோதனை நடத்தினர். அரசின் முக்கிய விவரங்களை வெளியிட்டதால் தான் சோதனை நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ரகசிய கலாச்சாரம் உருவாகி வருவதாகவும் பத்திரிகை நிறுவனங்கள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் செய்தித்தாளின் முதல் பக்க செய்தியை கருப்பு மையால் பூசி மறைத்து வெளியிட்டன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!