உலகம்
நோபல் பரிசு பெற்ற கருப்பின முதல் பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் மரணம்
உலக புகழ்பெற்ற நாவலான Beloved Song of Solomon உள்ளிட்ட நாவல்களை எழுதி உலகப்புகழ் பெற்றவர் டோனி மாரீசன். இன விடுதலையை மையமாகக் கொண்டு அவர் எழுதிய நாவல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. டோனி மாரீசன் தனது நாற்பதாவது வயதில் எழுதத் தொடங்கினார். தொடர்ச்சியாக 6 நாவல்களை எழுதி புகழின் உச்சியைத் தொட்டவர்.
1993 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற அவர், BELOVED என்ற நாவலுக்காக புலிட்சர் பரிசினையும் பெற்றவர் என்று குறிப்பிடத்தக்கது. 11 நாவல்களை எழுதி, குழந்தைகளுக்கான படைப்புலகிலும் இயங்கிய அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அன்னாருக்கு வயது 88.
அவரது மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பதிப்பாளர், மற்றும் அவரது குடும்பத்தினர், ‘கறுப்பின மக்களுக்கான தனிமொழியை தமது இலக்கியப் படைப்புகளில் உருவாக்க முயற்சித்தவர் என்றும் அமெரிக்காவின் பன்முக கலாச்சாரத்தை உலகிற்கு உரக்க தெரிவித்தவர்’ என்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!