உலகம்
துபாய் விபத்து : பேருந்தில் பயணம் செய்த 10 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாப பலி !
ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.துபாய் ராசிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதிய பேருந்து, நொறுங்கியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு துபாய் ஷேக் ராசித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வரும், 5 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் பலியான 10 இந்தியர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ராஜகோபாலன், வாசுதேவன், தீபக்குமார், ஜமாலுத்தீன் மற்றும் திலகன் ஆகியோரின் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து, இந்தியர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓமனில் நடைபெற்ற ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்குபெற்று திரும்பியவர்கள் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!