உலகம்
ஏவுகணை சோதனை தொடர்ந்து வடகொரியா கப்பலை பறிமுதல் செய்தது அமெரிக்கா! முற்றுகிறதா மோதல்?
வட கொரியா சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி அந்நாட்டு சரக்கு கப்பளை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
ஐ.நா வித்தித்துள்ள தடைகளை மீறி செயல்பட்டதாகவும், வட கொரியா அதிக அளவில் நிலக்கரியை ஏற்றுமதி செய்ய இந்த கப்பலை பயன்படுத்தியதற்காகவும் அமெரிக்க சட்டத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சர்வதேச தடைகளை மீறியதாக வட கொரிய கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது இதுவே முதல்முறையாகும்.
மேலும் கடந்த வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரியில், வியட்நாமின் தலைநகர் ஹனோயில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே பேச்சு வார்த்தை ஈடுபட்டது. இந்த சந்திப்பில் உடன்பாடு எதுவும் எட்டாத எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் தொடர்ந்து மோசமான சூழல் உருவாகிவருகிறது.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!