Viral
டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு? - அலறியபடி இருக்கைகள் மீது ஏறிய கூச்சலிட்ட பயணிகள்!
டெல்லி மெட்ரோ ரயிலில் உள்ள பெண்கள் பெட்டி ஒன்றில் நேற்று ஏராளமான பெண்கள் பயணம் செய்தனர். அப்போது, பெட்டியில் பாம்பு இருந்ததாக சிலர் கூறினர்.
இதனால் அச்சமடைந்த பெண் பயணிகள் அலறியபடி இருக்கைகள் மீது ஏறிக்கொண்டனர். மேலும், பயத்தில் துள்ளிக் குதித்து அலறினர். பின்னர் அக்சர்தாம் மெட்ரோ நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் ரயிலை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெண்கள் பெட்டியில் பாம்பு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், அங்கிருந்த பல்லியை, பெண்கள் பாம்பு என தவறாக புரிந்துகொண்டதால் பதற்றம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதனிடையே, ரயிலில் பாம்பு இப்பதாக பெண்கள் அச்சத்தில் கூச்சலிடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?