Viral
டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு? - அலறியபடி இருக்கைகள் மீது ஏறிய கூச்சலிட்ட பயணிகள்!
டெல்லி மெட்ரோ ரயிலில் உள்ள பெண்கள் பெட்டி ஒன்றில் நேற்று ஏராளமான பெண்கள் பயணம் செய்தனர். அப்போது, பெட்டியில் பாம்பு இருந்ததாக சிலர் கூறினர்.
இதனால் அச்சமடைந்த பெண் பயணிகள் அலறியபடி இருக்கைகள் மீது ஏறிக்கொண்டனர். மேலும், பயத்தில் துள்ளிக் குதித்து அலறினர். பின்னர் அக்சர்தாம் மெட்ரோ நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் ரயிலை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெண்கள் பெட்டியில் பாம்பு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், அங்கிருந்த பல்லியை, பெண்கள் பாம்பு என தவறாக புரிந்துகொண்டதால் பதற்றம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதனிடையே, ரயிலில் பாம்பு இப்பதாக பெண்கள் அச்சத்தில் கூச்சலிடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!