Viral
Insta ரீல்ஸ் மோகம்: ஓடும் காரிலிருந்து மேலே ஏறி சாகசம் செய்த வாலிபர் -வைரல் வீடியோவுக்கு குவியும் கண்டனம்
தற்போதைய இணைய உலகில் அனைத்தும் நவீனமாக மாறிவிட்டது. பலரும் மொபைல்போன் இன்டர்நெட் என பலவற்றுக்கும் அடிமையாகி வருகின்றனர். தொடர்புக்காக பயன்படுத்தப்பட்ட பல ஆப்கள் தற்போது பலரும் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரவும் பயன்படுத்தி வருகின்றனர். அதில் இளைஞர்கள் சாகசம் செய்வது தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் சில நேரங்களில் இந்த சாகசங்கள் அவர்களது உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவித்து வருகிறது. இரயில் முன்பு ரீல்ஸ், நடு சாலையில் ரீல்ஸ் என பலரும் செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது வாலிபர் ஒருவர் ஓடும் காரில், மேலே ஏறி நின்று சாகசம் செய்துள்ளார். அவரது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் யாருமில்லாத பாலத்தில் இந்த வாலிபர் கார் ஓட்டி செல்கிறார். அப்போது ஸ்டியரிங்கை தனியாக விட்டுவிட்டு, அந்த வாலிபர் காரின் மேலே மெதுவாக ஏறுகிறார். பிறகு அந்த காரின் மேலே கையை நீட்டி நின்றுகொண்டிருக்கிறார். அந்த காரும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. இதனை அவரை பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த ரீல்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. தொடர்ந்து அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!