Viral
கோழியை ஒரேதாவில் கவ்விய சிறுத்தை : வைரலாகும் CCTV காட்சிகள்!
கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதிகள் கருஞ்சிறுத்தை உலா வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தடாகம் சோமையனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் மதில் மேல் இருந்து கோழியை சிறுத்தை கவ்விக் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருவள்ளுவர் நகர் பழனியப்பா லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது வீட்டின் மதில்மேல் வளர்ப்பு கோழி அமர்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்குவந்த சிறுந்ததை ஒன்று ஒரு தாவில் கோழியை கவ்விக் கொண்டு சென்றது.
பின்னர் காலையில் காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, கோழியின் இறக்கைகள் வீட்டின் முன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோழியை சிறுத்த கவ்விச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இது குறித்து அக்குடும்பத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அப்பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Also Read: மதுரையில் TTF வாசன் கைது : நடந்தது என்ன?
Also Read
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!