Viral
எல்லாமே கரெக்ட்டு... மாணவர்களின் விடைத்தாளை சரிபார்க்காமல் திருத்திய பேராசிரியை... Reels வைரல்!
பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரில் மாணவர்களின் விடைத்தாளை சரிபார்க்காமல், அனைத்திற்கும் சரி என்று டிக் செய்யும் பேராசிரியை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரில் அமைந்துள்ளது பாடலிபுத்திரா பல்கலைக்கழகம் (PPU). இந்த பல்கலைக்கழகங்களுக்கு கீழ் பல கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இங்கு இருக்கும் கல்லூரி ஒன்றில் பேராசிரியர்கள், மாணவர்களின் விடைத்தாளை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாட்னா கல்லூரி ஒன்றில் சில பேராசிரியர்கள் விடைத்தாளை திருத்தி வந்தனர். அப்போது அதில் ஒரு பேராசிரியை, மாணவர்களின் விடைத்தாள்களை சரி பார்க்காமல் உடனுக்குடன் திருத்தி வந்துள்ளார்.
அதாவது மாணவர்களின் விடைகள் சரியாக இருக்கிறதா? அதில் ஏதாவது பிழை இருக்கிறதா? என்று எதையும் ஆராயாமல் அடுத்தடுத்து என்று தாள்களை திருப்பி அனைத்திற்கும் சரி என்று திருத்திவிட்டு, முன்பக்கத்தில் மார்க் போட்டுள்ளார். மேலும் இதனை அவரே ரீல்ஸ்-ஆகவும் எடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து தற்போது அந்த பேராசிரியை மீது போலீசார் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பேராசிரியை குறித்த விவரங்கள் எதுவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனாங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !