Viral
எல்லாமே கரெக்ட்டு... மாணவர்களின் விடைத்தாளை சரிபார்க்காமல் திருத்திய பேராசிரியை... Reels வைரல்!
பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரில் மாணவர்களின் விடைத்தாளை சரிபார்க்காமல், அனைத்திற்கும் சரி என்று டிக் செய்யும் பேராசிரியை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரில் அமைந்துள்ளது பாடலிபுத்திரா பல்கலைக்கழகம் (PPU). இந்த பல்கலைக்கழகங்களுக்கு கீழ் பல கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இங்கு இருக்கும் கல்லூரி ஒன்றில் பேராசிரியர்கள், மாணவர்களின் விடைத்தாளை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாட்னா கல்லூரி ஒன்றில் சில பேராசிரியர்கள் விடைத்தாளை திருத்தி வந்தனர். அப்போது அதில் ஒரு பேராசிரியை, மாணவர்களின் விடைத்தாள்களை சரி பார்க்காமல் உடனுக்குடன் திருத்தி வந்துள்ளார்.
அதாவது மாணவர்களின் விடைகள் சரியாக இருக்கிறதா? அதில் ஏதாவது பிழை இருக்கிறதா? என்று எதையும் ஆராயாமல் அடுத்தடுத்து என்று தாள்களை திருப்பி அனைத்திற்கும் சரி என்று திருத்திவிட்டு, முன்பக்கத்தில் மார்க் போட்டுள்ளார். மேலும் இதனை அவரே ரீல்ஸ்-ஆகவும் எடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து தற்போது அந்த பேராசிரியை மீது போலீசார் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பேராசிரியை குறித்த விவரங்கள் எதுவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனாங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!