Viral
’நான் வீட்டுக்கு போனும்’.. அரசு பேருந்தை ஜாலியாக ஒட்டிச்சென்ற நபர் : அடுத்துக் காத்திருந்த அதிர்ச்சி!
கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்திற்கு உட்பட்ட அவுராத் நகரில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சூரியவம்சி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தொழிற்சாலையில் பணியை முடித்து விட்டு மதுக்கடைக்கு சென்று மதுக்குடித்துள்ளார். பின்னர் போதையில் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்குத் தனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்தை தேடி பார்த்துள்ளார். ஆனால் அங்கு பேருந்து இல்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து சென்று விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனால் போதையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி வந்துள்ளார். பிறகு அங்குத் தனியாக நின்றிருந்த அரசு பேருந்தில் ஏறி, பேருந்தை இயக்கியுள்ளார்.
பின்னர் நல்ல போதையில் இருந்ததால் பேருந்தைச் சரிவர இயக்க முடியாமல் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு வந்த போலிஸார் சூரியவம்சியை பிடித்து விசாரித்தனர். இதில் போதையில் ஊருக்குச் செல்வதற்காக அரசு பேருந்து எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் கிராமத்திற்குச் செல்ல அரசு பேருந்து ஒட்டிமுயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!