Viral
கையை சுற்றிய விஷப்பாம்பு.. அதிர்ச்சியில் பாம்மை கடித்து கொலைசெய்த சிறுவன்.. சத்தீஸ்கரில் பரபரப்பு !
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். காட்டுப்பகுதி என்பதால் அங்கு பாம்புகள் சர்வசாதாரணமாக உலாவருவது வழக்கம்.
அங்குள்ள பந்தார்பத் கிராமத்தை சேர்ந்த தீபக் எனப்படும் 8 வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று திடீரென அவரின் கையை சுற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் அந்த பாம்பை உதறியபோது அந்த பாம்பு அவரை கடித்துள்ளது.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னை காப்பாறிக்கொள அந்த பாம்பை பிடித்து அதனை இருமுறை கடித்துள்ளார். இதில் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறுவன் நலமாக இருக்கிறார். இது குறித்துப் பேசிய சிறுவன், "என் கையை சுற்றிய பாம்பு என்னை கடித்ததால் அதனை இருமுறை கடித்தேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!