Viral
கணவர்களே உஷார்.. “பொம்மையை திருமணம் செய்து குழந்தை பெற்ற இளம்பெண்” : காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல குக்கரை செய்து கொண்ட பெண், ரோபோவை திருமணம் செய்த ஆண் என சமீப காலமாக விசித்திர திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் இதே பாணியில் பெண் ஒருவர் பொம்மையைத் திருமணம் செய்து மேற்கூறிய எலைட் பிரிவில் இடம்பெற்றுள்ளார். பிரேசிலை சேர்ந்த மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் (37) என்ற பெண் சரியான துணை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
மேலும் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தன்னோடு நடனமாட ஏற்ற துணை இல்லாமல் வருத்தத்தில் இருந்துள்ளார். மகளின் வருத்தத்தை அறிந்த அந்த பெண்ணின் தாய் தனது வீட்டில் இருந்த பழைய துணிகளை தைத்து பொம்மை ஒன்றை உருவாக்கி அதை தனது மகளிடம் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த பொம்மைக்கு மார்செலோ என்றும் பெயரிட்டுள்ளார். இதன் பின்னர் அந்த பொம்மையோடு அதிக நேரத்தை கழித்த அந்த பெண் அதனை விரும்பத் தொடங்கியுள்ளார். இதன் பின்னர் அந்த பொம்மையையே திருமணம் செய்யவும் முடிவெடுத்துள்ளார்.
அதன்படி சுமார் 250 பேர் முன்னிலையில் அந்த பொம்மையை அவர் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக கூறியுள்ள ரோச்சா மோரேஸ், "இந்த பொம்மை என்னோடு வாக்குவாதம் செய்யாது, சண்டைபோடாது, என்னைப் புரிந்து கொள்ளும். இப்படி ஒரு கணவர்தான் எனக்கு வேண்டும் என்பதால் இதை திருமணம் செய்தேன்" எனக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பொம்மையோடு ஹனிமூன் கொண்டாட வெளியூர் சென்ற அவர், ஒரு குழந்தையையும் தத்தெடுத்துள்ளார். ஆனால் அந்த குழந்தையும் ஒரு பொம்மைதான்.
இந்த திருமணத்தை பலர் பாராட்டினாலும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இது போன்ற விசித்திர திருமணங்களை பற்றி கூறியுள்ள மருத்துவர்கள் சிலர் இது போன்ற செயல்களை விளம்பரத்துக்காக செய்கிறார்கள். ஆனால், சிலர் பிறரை வெறுத்து தனக்கு ஆறுதல் கொடுக்கும் பொருள்களை திருமணம் செய்து கொள்கின்றனர் எனக் கூறியுள்ளனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!