Viral
’ஒரு பக்கெட் பிரியாணிக்கு விலைமதிக்க முடியாத பெட்ரோல் இலவசம்’ : தொப்பி வாப்பா பிரியாணி கடை அதிரடி ஆஃபர்!
5 மாநில தேர்தல் முடிந்ததை அடுத்து கடந்த மாதத்தில் இருந்து தினமும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110ஐ கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் ரூ.100 கடந்துவிட்டது.
இதுபோதாது என்று சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் சுங்க கட்டணத்தையும் ஒன்றிய அரசு உயர்த்தியதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இப்படி, நான்கு புறங்களில் இருந்தும் கடுமையாக விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி மட்டும் இந்த சிறப்பு சலுகை இருக்கும் என்றும், முதல் 50 நபர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்றும் தொப்பி வாப்பா பிரியாணி கடை அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள தங்களின் அனைத்து கிளை கடைகளிலும் இந்த ஆபர் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொப்பி வாப்பா பிரியாணி கடை தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்திலும் விளம்பரம் செய்துள்ளது. இந்த விளம்பரத்தை நெட்டிசன்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!