Viral
சே குவேராவை சுட்டுக்கொன்ற பொலிவியா ராணுவ வீரர் மரணம்... யார் இந்த மரியோ டெரான்?
மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சே குவேராவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் என அறியப்படும் பொலிவியா ராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சே குவேரா உலக நாடுகளில் நிலவும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், க்யூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போரில் ஈடுபட்டு அந்நாட்டு மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தவர்.
அதன் தொடர்ச்சியான பொலிவியாவின் விடுதலைக்காக தயாராகிக்கொண்டிருந்த சே குவேராவைப் பிடிக்க அமெரிக்கா முனைப்புக் காட்டியது. அதன்பின்னர் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி, வனப்பகுதியில் இருந்த சே குவேராவை அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகளின் உதவியுடன் பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துப் பிடித்தது.
பின்னர் அடுத்தநாளே அமெரிக்கா விடுத்த உத்தரவினால் சே குவேரா கொல்லப்பட்டார். இந்நிலையில் சேகுவேராவைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் என பொலிவியா ராணுவ வீரர் மரியோ டெரான் என்பவர் அறியப்பட்டார். நாளில் சே குவேராவைக் கொன்றதற்கான தனது வருத்ததை மரியோ டெரான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொலிவிய ராணுவ வீரர் மரியோ டெரான் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இந்தச் செய்தியை அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
Also Read
-
இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?
-
“திசை காட்டி விட்டது திருச்சி! எதிரிகள் எழ முடியாத அளவுக்கு வெல்வோம்!” : முரசொலி தலையங்கம்!
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!