Viral
ஏய்ய்.. நீ என்ன புலியா... வம்புக்கு இழுத்து சண்டையிடும் காட்டு யானைகள்; வால்பாறையில் நடந்த சுவாரஸ்யம்!
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மனித-வன உயிரின மோதலை ஏற்படுத்துவதோடு, பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியில் இரு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்ளும் வீடியோவினை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து ரசித்து வீடியோ எடுத்துள்ளனர். இக்காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இக்காட்சியில் இரு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொள்கின்றன. அதில் ஒரு யானை விலகிச்செல்ல முற்பட மற்றொரு யானை வா...வந்து பாரு.. மோதித்தான் பாரு.. என்பதை போல மீண்டும் மீண்டும் சென்று விலகிச்செல்லும் யானையினை வம்பிற்கு இழுத்து சண்டையிடுகிறது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் யானைகளின் சண்டையினை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
Also Read
-
மாநில அரசுகள் பின்பற்றும் அரும்பெரும் சாதனைகளை செய்த திராவிட மாடல் அரசு - வைகோ பாராட்டு !
-
உலகக்கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வு எல்லாம் அழிக்கமுடியாது - மும்பை பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து !
-
“அடிவயிறெரிய அறிக்கை விடலாமா?" : பழனிசாமிக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் இதுதான் - கங்குலி கருத்து !
-
”ஏன் பதறுகிறார் மோடி?” : ஊடகவியலாளர் அனுஷா ரவி சூட் கேள்வி!