Viral
நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்.. செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் கேரளா, கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த யானைக் கூட்டங்கள் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் முகாமிட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று மாலை மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் ரசிக்க வாகன சவாரி சென்றபோது, சாலை ஓரத்தில் யானைக் கூட்டம் ஒன்று நின்று கொண்டிருப்பதை சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வாகனத்தை யானை அருகே சென்று நிறுத்தி புகைப்படம் எடுக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த யானை கூட்டத்தில் இருந்த ஆண் யானை ஒன்று வாகனத்தை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்த வாகன ஓட்டி உடனடியாக வாகனத்தை இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!