Viral
நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்.. செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் கேரளா, கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த யானைக் கூட்டங்கள் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் முகாமிட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று மாலை மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் ரசிக்க வாகன சவாரி சென்றபோது, சாலை ஓரத்தில் யானைக் கூட்டம் ஒன்று நின்று கொண்டிருப்பதை சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வாகனத்தை யானை அருகே சென்று நிறுத்தி புகைப்படம் எடுக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த யானை கூட்டத்தில் இருந்த ஆண் யானை ஒன்று வாகனத்தை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்த வாகன ஓட்டி உடனடியாக வாகனத்தை இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?