Viral
கண்களை மூடினால் தெரிவது என்ன நிறம்? Eigengrau எதை குறிக்கிறது?
பொதுவாக கண்களை மூடினால் தெரிவது கருப்பு நிறம் அல்லது இருள் என்றுதான் கூறுவது வழக்கம். ஆனால், உண்மையில் தெரியும் நிறம் என்னவோ அடர் சாம்பல் நிறமாகத்தான் இருக்கும். அதாவது Eigengrau.
கண் இமையின் உட்புறம் கருப்பாக இல்லாத போது கண்களை மூடினால் மட்டும் கருப்பாக தெரிவது ஏன் என்ற கேள்வி பொதுவாக எழுகிறது.
Eigengrau மற்றும் அதன் இருப்பு மாயத்தோற்றம் இருப்பதாக இணைக்கப்படுகிறது. இது உயிரியல், உடலியல் மற்றும் நோயியல் அல்லாத வகையின் ஒரு மாய நிகழ்வு என்று கருதப்படுகிறது. இந்த கருதுகோளுக்குக் காரணம், உண்மையில் ஒரு வெளிப்புற யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத ஒன்றுடன் உணர்வதாக உள்ளது.
அதன்படி, கண்களை மூடும்போது நிகழும் ஒளியற்ற நிலையையே Eigengrau உணர்த்துகிறது. அறிவியல் ரீதியில் இதனை Visual Noise அல்லது Background Adaptation என கூறுவதுண்டு.
உயிரியல் ஒளிர்வின் (BioLuminescence) மூலம் Phosphenes மூலமும் மின்மினி பூச்சி போல கண்கள் ஒளியில் மின்னும். அப்போது 15 வகையிலான Phosphenes-கள் வடிவத்தில் வருவதை உணர முடியும். அதன் காரணமாகவே கண்களை இறுக மூடிய பிறகு சில நொடிகளுக்கு காண்பதெல்லாம் வண்ணமயமாக தெரிவதை உணர முடியும்.
அதேபோல கண்களை தேய்க்கும் போதும் ஒளியை உணர முடியும். அந்த நேரத்தில் Visual Hallucination எனும் மாயை நிகழும். Nightmare, Hypnagogia போன்றவற்றின் மூலம் மாய பிம்பங்கள் மற்றும் சாத்தியமில்லாத நிறங்கள் ஏற்படுவதும் காரணமாக அமைகிறது. மேலும், கண்களை மூடுவதனால் மூளையின் காட்சி பகுதி மூடப்பட்டுவிடாது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!