Viral
கதறி அழும் புதுமணப்பெண்... அலேக்காக தூக்கிச்சென்ற மணமகன்... காரணம் இதுதானா? - வைரல் வீடியோ!
பெண்கள் எவ்வளவுதான் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டாலும் கூட திருமணமாகி கணவர் வீட்டுக்குச் செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் மனச்சிதைவை எந்த ஆறுதல் சொல்லியும் தீர்த்துவிட முடியாது.
பல ஆண்டுகள் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த பெண் திடீரென பழக்கமில்லாதவர்களின் வீட்டுக்கு செல்லும் போது அங்குள்ளவர்களுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதிலும் பெரும் தயக்கம் காட்டுவர்.
அதைவிட, திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் செல்ல முற்படும்போது நிகழும் சோகங்கள் தனி அத்தியாயம். பெரும்பாலும் இதுபோன்ற சோக நிகழ்வுகளை சினிமாக்களிலேயே நிறைய பார்த்திருக்கிறோம். நிஜ வாழ்விலும் நடந்த இதுபோன்ற சம்பவம் வீடியோவாகப் பதிவாகியுள்ளது.
திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது பெற்றோர் முன்பு அழுதுகொண்டிருந்த மணமகள் வெகு நேரமாகியும் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்.
இதனால் பொறுமையிழந்த மணமகன் சடாரென மணமகளை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார். அப்போதும் அந்தப் பெண் தன் அழுகையை நிறுத்தாமல் கதறிக் கொண்டே இருந்தார். இது தொடர்பான வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
NEET 2024 தேர்வு மோசடி விவகாரம் : 11 மாணவர்கள் உள்பட 24 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன?
-
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !