Viral
இணையத்தைக் கலக்கும் தன்பாலின காதலர்களின் pre-wedding போட்டோஷூட்! (ALBUM)
இந்தியாவில் தன்பாலின உறவு கொண்டால் சட்டப்பிரிவு 377-ன் படி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்கிற நிலை முன்னர் இருந்து வந்தது.
கடந்தாண்டு இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து, தன்பாலின உறவு சட்டவிரோதமானது அல்ல என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு தன்பாலின உறவு ஆதரவாளர்களுக்கு (LGBT) மகிழ்ச்சி அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு இந்தியாவில் ஒருபாலின திருமனங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருபாலின காதலர்கள் அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோணி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள்.
இதற்காக இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னதாக எடுக்கப்படும் pre-wedding போட்டோஷூட் எடுத்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”