Viral
“புத்தகம் படித்தால் ஹேர் கட் ஆஃபர்” - தூத்துக்குடியில் அறிவுப்பசி ஊட்டும் சலூன் ! (வீடியோ)
சலூன் கடைகளில் பெரும்பாலும் டி.வியில் பாடல்களோ, செய்தி சேனல்களோ ஓடிக்கொண்டிருக்கும். அக்கம் பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளை பேசுவது வழக்கமாக இருக்கும்.
ஆனால் தூத்துக்குடியில் உள்ள முடித் திருத்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பசி ஊட்டும் வகையிலும், புத்தக வாசிப்பை ஏற்படுத்தவும் கடையின் அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார் அதன் உரிமையாளர் பொன் மாரியப்பன்.
பொன் மாரியப்பனின் இந்தச் செயலுக்கு தூத்துக்குடி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், தனது கடையில் இருந்து புத்தகங்களை எடுத்தும் வெறும் 10 பக்கங்களை படித்தால் கூட முடித் திருத்தும் கட்டணத்தில் சலுகை அளித்து அசத்துகிறார் கடையின் உரிமையாளர்.
சலூன் கடையில் இலக்கியம், சிறுகதை என அனைத்து விதமான புத்தகங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார். இதனால் கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் நூலகங்களில் இருப்பது போலவே புத்தகங்களை படித்து வருகின்றனர்.
Also Read
-
”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
-
பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!