Viral
“புத்தகம் படித்தால் ஹேர் கட் ஆஃபர்” - தூத்துக்குடியில் அறிவுப்பசி ஊட்டும் சலூன் ! (வீடியோ)
சலூன் கடைகளில் பெரும்பாலும் டி.வியில் பாடல்களோ, செய்தி சேனல்களோ ஓடிக்கொண்டிருக்கும். அக்கம் பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளை பேசுவது வழக்கமாக இருக்கும்.
ஆனால் தூத்துக்குடியில் உள்ள முடித் திருத்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பசி ஊட்டும் வகையிலும், புத்தக வாசிப்பை ஏற்படுத்தவும் கடையின் அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார் அதன் உரிமையாளர் பொன் மாரியப்பன்.
பொன் மாரியப்பனின் இந்தச் செயலுக்கு தூத்துக்குடி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், தனது கடையில் இருந்து புத்தகங்களை எடுத்தும் வெறும் 10 பக்கங்களை படித்தால் கூட முடித் திருத்தும் கட்டணத்தில் சலுகை அளித்து அசத்துகிறார் கடையின் உரிமையாளர்.
சலூன் கடையில் இலக்கியம், சிறுகதை என அனைத்து விதமான புத்தகங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார். இதனால் கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் நூலகங்களில் இருப்பது போலவே புத்தகங்களை படித்து வருகின்றனர்.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!