Viral
“புத்தகம் படித்தால் ஹேர் கட் ஆஃபர்” - தூத்துக்குடியில் அறிவுப்பசி ஊட்டும் சலூன் ! (வீடியோ)
சலூன் கடைகளில் பெரும்பாலும் டி.வியில் பாடல்களோ, செய்தி சேனல்களோ ஓடிக்கொண்டிருக்கும். அக்கம் பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளை பேசுவது வழக்கமாக இருக்கும்.
ஆனால் தூத்துக்குடியில் உள்ள முடித் திருத்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பசி ஊட்டும் வகையிலும், புத்தக வாசிப்பை ஏற்படுத்தவும் கடையின் அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார் அதன் உரிமையாளர் பொன் மாரியப்பன்.
பொன் மாரியப்பனின் இந்தச் செயலுக்கு தூத்துக்குடி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், தனது கடையில் இருந்து புத்தகங்களை எடுத்தும் வெறும் 10 பக்கங்களை படித்தால் கூட முடித் திருத்தும் கட்டணத்தில் சலுகை அளித்து அசத்துகிறார் கடையின் உரிமையாளர்.
சலூன் கடையில் இலக்கியம், சிறுகதை என அனைத்து விதமான புத்தகங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார். இதனால் கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் நூலகங்களில் இருப்பது போலவே புத்தகங்களை படித்து வருகின்றனர்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !