Viral
“புத்தகம் படித்தால் ஹேர் கட் ஆஃபர்” - தூத்துக்குடியில் அறிவுப்பசி ஊட்டும் சலூன் ! (வீடியோ)
சலூன் கடைகளில் பெரும்பாலும் டி.வியில் பாடல்களோ, செய்தி சேனல்களோ ஓடிக்கொண்டிருக்கும். அக்கம் பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளை பேசுவது வழக்கமாக இருக்கும்.
ஆனால் தூத்துக்குடியில் உள்ள முடித் திருத்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பசி ஊட்டும் வகையிலும், புத்தக வாசிப்பை ஏற்படுத்தவும் கடையின் அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார் அதன் உரிமையாளர் பொன் மாரியப்பன்.
பொன் மாரியப்பனின் இந்தச் செயலுக்கு தூத்துக்குடி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், தனது கடையில் இருந்து புத்தகங்களை எடுத்தும் வெறும் 10 பக்கங்களை படித்தால் கூட முடித் திருத்தும் கட்டணத்தில் சலுகை அளித்து அசத்துகிறார் கடையின் உரிமையாளர்.
சலூன் கடையில் இலக்கியம், சிறுகதை என அனைத்து விதமான புத்தகங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார். இதனால் கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் நூலகங்களில் இருப்பது போலவே புத்தகங்களை படித்து வருகின்றனர்.
Also Read
-
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்: அதிரடியான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : 51 முக்கிய அம்சங்கள்!
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPI-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
-
5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!
-
#TNElection2026Breaking : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!