Viral
“செத்து செத்து விளையாடலாமா?” - பயணிகளை மெர்சலாக்கும் குதிரை! (வைரல் வீடியோ)
வீட்டுவேலை செய்யச் சொல்லும் போது, அதை மறுக்க சிறுவர்கள் செய்யும் உயாயம், ‘கால் வலிக்கிறது’ என்பதுதான். இதைப்போன்று மனிதர்கள் தூங்குவதுபோல் நடிப்பது, காட்டு கத்தாக கத்தினாலும் காது கேட்காதது போன்று நடிப்பது என மனிதர்கள் தங்கள் இயல்பை பல்வேறு சமயங்களில் காட்டி வேலையை தட்டிக் கழிப்பார்கள்.
இதுபோன்று ஒரு குதிரை சவாரி செய்ய விரும்பாமல் தன் மீது அமரும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க, மயங்கி விழுந்து கிடப்பதுபோன்று நடிக்கிறது. இதைக்கண்டு சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைவதுடன், குதிரையை எழுப்ப மனமில்லாமல் குதிரை சவாரி செய்யாமலேயே செல்கின்றனர்.
மனிதர்கள் பக்கத்தில் இல்லாத நேரத்தில் தலையை தூக்கி பார்ப்பதும், யாராவது அருகில் வந்தால் மயங்கி விழுந்து நடிப்பதும் இந்த குதிரையின் அபார நடிப்புத் திறனை படம்பிடித்துக் காட்டுகிறது.
இப்படியாக, செத்து செத்து விளையாடும் இந்த குதிரையின் சேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!