Viral
மதுபோதையில் சிக்கினால் ஊருக்கே கறி விருந்து - விநோத தண்டனை விதிக்கும் குஜராத் கிராமம்!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் காதிசிதாரா கிராமத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவ்வப்போது மோதல், கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை தடுக்க முடிவு செய்த கிராமத்தினர், மதுபோதையில் ஊருக்குள் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என கடந்த 2013ம் ஆண்டு அறிவித்தனர். அதன்படி மதுபோதையில் வருவோருக்கு 2 ஆயிரம் ரூபாயும், போதையில் தகராறில் ஈடுபட்டால் 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் மதுபோதையில் சிக்குவோர் 800 பேர் கொண்ட மொத்த கிராமத்துக்கும் ஆட்டுக்கறி விருந்து வைக்க வேண்டும் என்ற விநோத தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், தற்போது கிராமத்தில் யாரும் மது அருந்துவதில்லை என ஊர்ப் பெரியவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Also Read
-
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!
-
அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
ரூ.913 கோடி முதலீடு... 13,080 பேருக்கு வேலைவாய்ப்பு : சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள்!
-
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை : 10 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.822.70 கோடி.. சென்னையில் சர்வதேச தரத்தில் உருவாகும் மெகா பேருந்து நிலையம் – என்னென்ன வசதிகள் உள்ளது?