Viral
மதுபோதையில் சிக்கினால் ஊருக்கே கறி விருந்து - விநோத தண்டனை விதிக்கும் குஜராத் கிராமம்!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் காதிசிதாரா கிராமத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவ்வப்போது மோதல், கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை தடுக்க முடிவு செய்த கிராமத்தினர், மதுபோதையில் ஊருக்குள் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என கடந்த 2013ம் ஆண்டு அறிவித்தனர். அதன்படி மதுபோதையில் வருவோருக்கு 2 ஆயிரம் ரூபாயும், போதையில் தகராறில் ஈடுபட்டால் 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் மதுபோதையில் சிக்குவோர் 800 பேர் கொண்ட மொத்த கிராமத்துக்கும் ஆட்டுக்கறி விருந்து வைக்க வேண்டும் என்ற விநோத தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், தற்போது கிராமத்தில் யாரும் மது அருந்துவதில்லை என ஊர்ப் பெரியவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Also Read
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!