Viral
மதுபோதையில் சிக்கினால் ஊருக்கே கறி விருந்து - விநோத தண்டனை விதிக்கும் குஜராத் கிராமம்!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் காதிசிதாரா கிராமத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவ்வப்போது மோதல், கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை தடுக்க முடிவு செய்த கிராமத்தினர், மதுபோதையில் ஊருக்குள் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என கடந்த 2013ம் ஆண்டு அறிவித்தனர். அதன்படி மதுபோதையில் வருவோருக்கு 2 ஆயிரம் ரூபாயும், போதையில் தகராறில் ஈடுபட்டால் 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் மதுபோதையில் சிக்குவோர் 800 பேர் கொண்ட மொத்த கிராமத்துக்கும் ஆட்டுக்கறி விருந்து வைக்க வேண்டும் என்ற விநோத தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், தற்போது கிராமத்தில் யாரும் மது அருந்துவதில்லை என ஊர்ப் பெரியவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!