Viral
“திருடிய செல்போனை திருப்பிக் கொடுக்கணும்னா ரூ.6,000 கொடுங்க...” - போலிஸாரிடமே பேரம் பேசிய கொள்ளையன்!
திருவள்ளூரில் அரசு பெண் ஊழியரின் வீட்டில் இருந்து 16,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் செல்போனை கொள்ளையன் ஒருவன் திருடிச்சென்றுள்ளான். செல்போனை திருடிய கொள்ளையன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் இருந்துள்ளான்.
அந்தப் பெண்ணின் தம்பி திருடனுக்கு தொடர்புகொண்டு, செல்போனை திரும்பக் கேட்க, அதற்கு கொள்ளையன் 6,000 ரூபாய் தந்தால் செல்போனை திருப்பி தருவதாக கூறியுள்ளான். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினரும் கொள்ளையனிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியபோது காவல்துறையினரிடமும் 6,000 ரூபாய் பணம் கொடுத்தால் செல்போனை திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளான்.
மீண்டும் செல்போன் உரிமையாளர்களிடம் பேசிய திருடன் நீங்கள் காவல்துறையில் புகார் அளித்தாலும் சரி நீங்கள் ஆறாயிரம் ரூபாய் கொடுத்தால் செல்போனை எப்படி திருடினேனோ, அதேபோல் வந்து செல்போனை வைத்துவிட்டு பணத்தை வாங்கிச் செல்வதாக வாக்குறுதி அளிக்கிறான். கொள்ளையன் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !