Viral
“கல்விக்கு வயது ஒரு தடையல்ல” - என்ன செய்தார் இந்த பஞ்சாப் சிங்கம்?!
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் சோஹன் சிங். 83 வயதாகும் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலப் பாடத்தில் இளங்கலை பட்டத்தினை பெற்றார். 1958ல் திருமணமான பிறகு, அவர் தனது மனைவியுடன் கென்யாவில் குடியேறினார்.
1991ல் இந்தியா திரும்பினார். இதற்கு முன்னர் பணியாற்றிய கல்லூரியின் துணை முதல்வரின் ஆலோசனையின்பேரில் கடந்த 2017ல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கினார்.
ஜலந்தரில் உள்ள லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுகலைப்பாடப் பிரிவில் சேர்ந்தார். மிகத் திறமையாக படித்து தற்போது, ஆங்கில பாடத்தில் முதுகலைப்பட்டத்தை அவர் பெற்றுள்ளார். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆங்கில பாடத்தில் முதுகலைப்பட்டம் பெறுவதற்கு முழு முயற்சியில் இறங்கினேன். தற்போது பட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவில் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வேலை தேடி நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை என்றார் சோஹன் சிங்.
‘வயது என்பது வெறும் எண்’ மட்டுமே என்பதை நிரூபித்த சோஹன் சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!