Viral
மொரட்டு சிங்கிள்களை மிங்கிளாக்க காதல் ரயில் விட்ட சீன அரசு - இந்தியாவுக்கும் இப்படி ஒரு ரயில் வருமா?
உலகம் முழுவதும் காதலர்கள், திருமணம் ஆனவர்களைவிட, திருமணமாகாத, காதலில் விழாத ஆண்களே அதிகமாக உள்ளனர். அப்படி, சீனாவில் சுமார் 200 மில்லியன் இளைஞர்கள் சிங்கிளாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகையால், தங்களுக்கான இணையர்களை இளைஞர்கள் தேர்ந்தெடுப்பதற்காக சீனாவின் கம்யூனிச இளைஞர் கழகமும், செங்க்டு ரயில்வேத்துறையும் இணைந்து y999 Love - Pursuit (காதல் கொள்ளும் ரயில்) என்ற ரயிலை தயாரித்திருந்தனர்.
10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,000 ஆண்களும், 1,000 பெண்களும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது, சீனாவின் மேற்கு சாங்கிங் ரயில் நிலையம் முதல் ஆமுர் வரை பயணித்தது. இந்த சிறப்பு ரயில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது வெறும் ரயில் பயணமாக மட்டும் இல்லாமல், ஆண்களும், பெண்களும் சேர்ந்து விளையாடும் வகையில் நிறைய விளையாட்டு அம்சங்களும், நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் முன் பின் தெரியாத இருவர் அறிமுகமாக உதவியாக இருக்கும்.
இதேபோல், கடந்த ஆண்டு இயக்கப்பட்ட காதல் ரயிலில் 3000 பேர் பயணித்துள்ளனர். இதில் 10 ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இப்படி ஒரு காதல் ரயில் தேவை. ஒன்றல்ல ஓராயிரம் இருந்தாலும் போதாது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!