Viral
மாட்டுக்கு ராக்கி கட்டி சகோதரி ஆக்கிவிட்டால், யாரும் கொல்லமாட்டார்கள்: பா.ஜ.க நிர்வாகியின் ‘அடடே’ யோசனை !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்ட மேலவை உறுப்பினராக இருப்பவர் புக்கல் நவாப். இவர் கடந்தாண்டு சமாஜ்வாடி கட்சியில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்தார். இணைந்த நாளில் இருந்தே, தான் தீவிர பா.ஜ.க ஆதரவாளன் என காட்டிக்கொள்ள பல்வேறு சர்ச்சை பேச்சுகள் பேசி வருகிறார்.
மேலும், பா.ஜ.க தலைமையிடம் நற்பெயர் வாங்க “தான் ஒரு அனுமன் பக்தர்” என்று அறிவித்து, சட்ட மேலவை உறுப்பினர் பதவியை மறந்து கடந்த ஒருவருடமாக மாநிலம் முழுவதும் அனுமன் விழாக்களை நடத்தி வந்தார்.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அனுமன், முஸ்லிம் என்றும் ரஹ்மான், புர்கான் போன்ற முஸ்லிம் பெயர்களின் உச்சரிப்பு அனுமன் பெயரிலும் இருப்பதால், உண்மையில் அனுமன் ஒரு முஸ்லிம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பா.ஜ.க தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி ரக்ஷா பந்தன் என்னும் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பசுமாட்டுக்கு ராக்கி கட்டுப்போவதாக அறிவித்தார் புக்கல் நவாப்.
மேலும் இதுகுறித்து அவர் பேசியதாவது, “சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்களுக்கு ராக்கி கட்டுவார்கள். அதேபோல் பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அத்தனை புனிதமானது. எனவே இந்த நாளில் பசுக்களுக்கு ராக்கி கட்ட இருக்கிறேன்.
இதற்காக லக்னோவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், பசுக்களை கொல்லக்கூடாது வழிபட வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்துவேன்" என தெரிவித்துள்ளார். ஆனால், அறிவித்ததைப் போல இன்று விழா நடக்கவில்லை. இது குறித்து எந்தத் தகவலும் வெளியாகிவில்லை.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!