Viral
‘ஓய்வூதிய விவகாரம்’- 107 வயது முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் உருக்கம்!
புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆரோக்கியசாமி (வயது 107). நெல்லித்தோப்பில் உள்ள அருள்படையாச்சி வீதியில் வசித்து வரும் இவர், பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே புதுவை காவல்துறையில் சேர்ந்து பணியாற்றிய கடந்த 1965ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, 107 வயதான ஆரோக்கியசாமி வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அப்போது ஆரோக்கியசாமி அவரிடம், புதுச்சேரி காவல்துறையில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், ஓய்வூதியம் பெறும் காவலர்களுக்கு இன்னும் 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கூட அமல்படுத்தப்படவில்லை, அதனை அமல்படுத்த உதவும்படி கோரிக்கை விடுத்தார்.
இதனைக் கேட்டுக்கொண்ட போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, அவரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார். 107 வயதான போதும், போலீஸ் நலனுக்காக ஆரோக்கியசாமி கோரிக்கை விடுத்தது போலீஸ் டி.ஜி.பி.,யையும், அதிகாரிகளையும் நெகிழ வைத்துள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!