Viral
மதுபோதையில் காவலருக்கு முத்தம் கொடுத்த இளைஞர்: வழக்குப் பதிவு செய்த போலீஸ் (விடியோ)
தெலங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ’போனாலு’ என்ற திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிறு அன்று இரவு ஐதராபாத் வித்யா நகரில் திருவிழா நடை பெற்றது.
இதனையொட்டி அப்பகுதி இளைஞர்கள் சாலையில் மதுபோதையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது காவல்துறை ஆய்வாளர் எஸ்.மகேந்திரன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இளைஞர்கள் நடனமாடுவதை கட்டுப்படுத்த சென்ற ஆய்வாளரை, தீடிரென இழுத்து இளைஞர் ஒருவர் முத்தம் கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர், இளைஞரைப் பளார் என்று அறைந்தார். ஆனாலும் அந்த இளைஞர் மீண்டும் மது போதையில் நடனத்தை தொடர்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
அதனை அடுத்து காவல்துறை அதிகாரி எஸ்.ஐ மகேந்திரனுக்கு முத்தம் கொடுத்த வங்கி ஊழியர் பானுவின் மீது, அரசு அதிகாரி பணியில் இருக்கும் போது பணி செய்ய விடாமல் தொல்லைக் கொடுத்தது மற்றும் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!