Viral
கணவன் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி : திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் வேலு. இவர் கட்டட வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ஞானம்மாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேலு தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.
வீட்டில் தகராறு ஏற்படும்போதெல்லாம் ஞானம்மாளை அடித்து துன்புறுத்தியுள்ளார் வேலு. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் வேலு குடித்து வந்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல வேலு சண்டைபோடுவதால் ஆத்திரமடைந்த ஞானம்மாள், அதிகாலை சமையலறையில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த வேலுவின் தலையில் போட்டுக் கொன்றுள்ளார்.
அப்போது அவரது மகனும், மகளும் வெளியே வந்துள்ளனர். இறந்து கிடந்த வேலுவைப் பார்த்து இருவரும் கதறி அழுதுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வேலுவின் வீட்டிற்கு வந்து இறந்துகிடந்த வேலுவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தகவலறிந்த போலீசார், வேலுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவுசெய்து ஞானம்மாளை கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!