Viral
தோழியுடன் சேர்ந்து கணவரை துப்பட்டாவால் நெரித்துக் கொன்ற மனைவி: கொலை குறித்து அதிர்ச்சி தகவல்!
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதில் ஆட்டோ டிரைவராக பணியாற்றிவருகிறார். அவருக்கும் காயத்ரி என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.
நாகராஜ், தன் மனைவி காயத்ரியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல இருவருக்குமிடையே சண்டை எற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி, கணவர் நாகராஜ் உறங்கும்போது, தனது தோழி பானுவுடன் சேர்ந்து தலையணையை வைத்து முகத்தில் அழுத்தியும், துப்பாட்டாவை வைத்து கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.
பின்னர் எதுவும் தெரியாதது போல, பானு அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். காயத்ரியும், அதிகாலை 4 மணியளவில், குழந்தைகளை தனது அக்கா வீட்டில் விட்டுவிட்டு, தம்பி வினோத்தின் ஆட்டோவில் வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு புறப்பட்டார்.
காலையில் மர்மான முறையில் நாகராஜ் இறந்து கிடந்ததையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலையில் ஈடுபட்ட காயத்ரி மற்றும் பானு இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தன் மீது சந்தேகப்பட்டதற்காக கொலை செய்ததாக போலீஸ் விசாரணையின்போது காயத்ரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!