Viral
அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் : பயந்து மேடைக்கு அடியில் ஒளிந்த செய்தியாளர்கள் (வீடியோ)
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் ரிட்ஜ் கிர்ரேஸ்ட் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இதனால் சாலைகளிலும், கடைகளிலும் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
அதேபோல், சில அடுக்குமாடி கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தெற்கு கலிஃபோர்னியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இது மிகவும் மோசமான அளவு ஆகும். இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், செய்தி சேனலில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது வாசிப்பாளர்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்துள்ளனர். இதனால் நேரலையிலேயே அச்சமடைந்த அவர்கள் மேஜைக்கு அடியில் ஒளிந்துக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது செய்தி தொலைக்காட்சியின் ஸ்டுடியோவில் நில அதிர்வு உணரப்பட்டது நேரலையில் பதிவாகியுள்ளதை அந்த செய்தி நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
மேலும், கலிஃபோர்னியா மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!