Viral

“இசையின் கவிதைகள் ஒரு வாகான நைலான் கயிறு”- விக்னேஷ் சி செல்வராஜ் | நான் ஆனது எப்படி?   

அமேஸான் கிண்டில் நிறுவனம் நடத்திய 'Pen To Publish 2018' போட்டியில், தமிழ் மொழிக்கான குறும்படைப்பு பிரிவில் வெற்றி பெற்ற விக்னேஷ் சி செல்வராஜ் உடன் இன்றைய ‘நான் ஆனது எப்படி?’ நேர்காணல்.

கவிஞர் இசையின் கவிதைகளை முன்வைத்து விக்னேஷ் எழுதிய ‘தேனாம்பேட்டையின் பீக் ஹவர் சிக்னலில் குத்தாட்டம் போடச்செய்யும் இசை’ எனும் கிண்டில் மின்னூல் கட்டுரைக்காக அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில், கவிதைகள் குறித்தும், கவிஞர் இசை குறித்தும், அவரது வாசிப்பு ஆர்வம் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.