Viral

வாட்ஸப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யுங்கள் - பயனாளர்களுக்கு வாட்ஸப் நிறுவனம் வேண்டுகோள்!

இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலியைத் தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்வதற்காகப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸப் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தற்போது உள்ள வாட்ஸப் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹேக்கர்கள் செயலியை ஹேக் செய்ய வாய்ப்புள்ளதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக வாட்ஸப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்தால் பயனாளர்களின் தகவல் திருடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.