Viral
பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்த நாய் : கைது செய்த போலீசார்!
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் நான்காவது கட்டமாக 17 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு நடந்தபோது மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பரில் உள்ள நவ்நாத் நகரில் வசிக்கும் ஏக்நாத் மோதிராம் சவுத்ரி, பா.ஜ.க விற்காக வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டார். தனது நாயின் உடம்பு முழுவதும் மோடிக்கு வாக்களியுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் இடம் பெற்ற ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தார்.
அந்த நாயுடன் ஏக்நாத், நந்துர்பர் நகர் முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தார். தேர்தல் பிரசாரம் முடிந்திருந்த நிலையில் நாய் மூலம் பிரசாரம் செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பா.ஜ.க விற்காக பிரசாரம் செய்த நாயையும், அதன் உரிமையாளரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாய் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!