Viral
கோழிக்குஞ்சை காப்பாற்ற போராடிய சிறுவன்;வைரலாகும் சிறுவனின் செயல்
மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் பகுதியைச் சேர்ந்த சிறுவன் டெரெக்.தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு குறுக்கே வந்துள்ளது. அதனை கவனிக்காத சிறுவன் சைக்கிளால் கோழிக்குஞ்சு மீது மோதியுள்ளான்.
அடிபட்ட கோழிக்குஞ்சை பார்த்து பதறிய சிறுவன், உடனடியாக அதனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளான். மேலும், தனது கையில் இருந்த சில 10 ரூபாய் நோட்டையும் அச்சிறுவன் கோழிக்குஞ்சின் சிகிச்சைக்காக எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க கூறியுள்ளான்.
ஒரு கையில் கோழிக்குஞ்சுடனும், மறுகையில் பணத்துடனும் சிறுவன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
எனினும், அந்த கோழிக்குஞ்சு இறந்துவிட்டதை சிறுவனின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். “அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களை விட தனித்துவமாக இருக்கிறான்” என்று சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
எனினும், பலரும் சிறுவனின் இரக்கத்துக்கு பாராட்டுகளை குவித்துவருகின்றது
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!