Tamilnadu
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அஜிஸ்கான் என்ற நபர் பந்து வீசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கிச் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த சக வீரர்கள் அவரை மீட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அஜிஸ்கானைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உடல் அவரது குடும்பத்தாரால் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள் : தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
-
“எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
-
“மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!