Tamilnadu
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க. தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி'யே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
'லோக்போல்' அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க. கூட்டணி 40.1 சதவீத வாக்குகளைப் பெற்று, 181 முதல் 189 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனத் தெரிவித்தது.
அதேபோல் போல் டிராக்கர்' வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தி.மு.க. கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று மீண்டும் அரியணை ஏறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ABP நாடு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தி.மு.க 40- 42% வாக்குகளைப் பெற்று 172 முதல் 178 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளது. இப்படி வெளியாகும் அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதை உறுதிபடுத்தி வருகின்றன.
Also Read
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எடப்பாடி TO சென்னை TO டெல்லி... இதுதான் பழனிசாமியின் கடந்த 5 ஆண்டு பணியாக இருந்தது..” - கனிமொழி எம்.பி!