Tamilnadu
நாள்தோறும் புது புது சாதனைகள்! - பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில் தமிழ்நாடு முதலிடம்!
கல்வி, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிசெய்து, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டுகிற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
அதற்கான சான்றுகளை, ஒன்றிய அரசின் தரவுகளே உறுதி செய்து வருகின்றன. அவ்வரிசையில், தற்போது பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது தமிழ்நாடு.
அதிலும், கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் மட்டும் தமிழ்நாடு முழுக்க 162 புதிய பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சுமார் 23 கோடி மக்கள் வாழும் உத்தரப் பிரதேசம் மாநிலத்திலேயே 2,240 பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்தான் இருக்கும் நிலையில், 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 2,429 மையங்கள் நவீன முறையில் சிறப்பாக இயங்கி வருகின்றன.
இதுவே, பா.ஜ.க.வின் தோல்வி மாடலுக்கும், தமிழ்நாட்டின் வெற்றிகரமான திராவிட மாடலுக்கும் இடையிலான வேறுபாடாகவும் அமைந்துள்ளது.
அண்மையில்தான், உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்ற பட்டியலும், இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிகொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு என்ற தரவும் வெளியிடப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிறப்புக்காலம் முதல் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்காலம் என தொடந்து வயது முதிர்வு காலம் வரை அனைத்து வயதினருக்குமான நலத்திட்டங்களை வழங்கி, அனைவரின் நலனையும் பேணும் அரசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயலாற்றி வருவதற்கான, சான்றுகளில் தற்போது இதுவும் ஒன்றாக இணைந்துள்ளது பெருமைக்குரியதாய் அமைந்துள்ளது.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!