Tamilnadu
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. மேலும், இதை வலுசேர்க்கும் வகையில், தே.மு.தி.கவும் கூட்டணியில் இணைந்துள்ளது.
அதோடு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் கழகப் பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சட்டமன்ற தேர்தலில் 28 தொகுதிகளும், மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் மற்ற கட்சிகளுக்கும் எத்தனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகும்.
Also Read
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!
-
திருவிழா போல் காட்சியளிக்கும் அண்ணா அறிவலாயம் : ஒரு புறம் கூட்டணி பேச்சு - மற்றொரு புறம் விருப்ப மனு!
-
ரூ.10.38 கோடி 2 புதிய ‘தோழி’ விடுதிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சிவகங்கையில் ரூ.5,300 கோடி முதலீடு செய்யும் MRF நிறுவனம்!: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!