Tamilnadu
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.02.2026) வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின்மாற்றி கட்டமைப்புகளை, பாதுக்காப்பான வளைதள மின்மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
310 திறந்தவெளி மின்மாற்றி கட்டமைப்புகளை பாதுகாப்பான வளைதள மின்மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஆர்.பி காலனி 8-வது தெருவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின் மாற்றி கட்டமைப்புகளை, பாதுக்காப்பான வளைதள மின் மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
முன்னதாக, ஜவகர் நகரில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி உபகரண பொருட்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரங்கள், சலவை பெட்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 248 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Also Read
-
+2 Results வெளியீடு : 95.20% மாணவர்கள் தேர்ச்சி - எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?
-
தமிழ்நாட்டில் பாஜக முழுமையாகப் புதைக்கப்பட்டு விட்டது என்று எழுதினார்களா : நாளிதழ்களுக்கு முரசொலி கேள்வி!
-
“துரோகம் செய்து முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி!” : திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கடும் கண்டனம்!
-
மக்களுக்கு நன்றி.. தலைவருக்கு அதிகாரம்.. : தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! (முழு விவரம்)
-
“விஜய் ஆட்சியமைக்க தி.மு.க எந்த இடையூறும் செய்யாது” : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!