Tamilnadu

🔴LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவை: இந்த அக்கறை அதிமுக ஆட்சியில் இல்லாமல் போனது ஏன்? - முதலமைச்சர் பதிலடி!

அதிமுகவுக்கு பாராட்ட மனமில்லையா?

அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளில் மோனோ ரயில் திட்டம், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள், இலவச செல்போன், வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம், பழைய ஓய்வூதியத் திட்டம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் திமுக ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் செய்து காட்டியுள்ளோம். திமுக ஆட்சியை மக்கள் பாராட்டி வருகின்றனர். அதிமுகவுக்குத்தான் பாராட்ட மனமில்லை.

– சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு பதிலடி.

Updated at: January 22, 2026 at 1:12 PM

பழைய கதைகளை அரைக்கிறது அதிமுக!

“ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளதாக ஒன்றிய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. இந்திய அளவில் எந்த மாநிலமும் கண்டிராத வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. முதலீட்டு நிறுவனங்களின் வசதிக்காக அவர்களின் தலைமையகங்கள் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் அமைந்திருக்கும். ஆனால் தொழிற்சாலைகள் மட்டுமே தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இதெல்லாம் தெரியாமல் அதிமுகவினர் பழைய கதைகளைத் தொடர்ந்து அரைத்துக் கொண்டே உள்ளனர்!”

– சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி.

Updated at: January 22, 2026 at 1:12 PM

இப்போதாவது குரல் கொடுங்கள்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்களே?

– எடப்பாடி பழனிசாமி.

ஆமாம், நாங்கள் அதை மறுக்கவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால், அதனை நிச்சயமாக நிறைவேற்றியிருப்போம். தற்போது ஒன்றியத்தில் உங்கள் கூட்டணி கட்சிதானே ஆட்சியில் இருக்கிறது? இதற்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டியதுதானே? இப்போதாவது குரல் கொடுங்கள்!

– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Updated at: January 22, 2026 at 1:12 PM

அடுத்த ஆட்சியும் திராவிட மாடல் ஆட்சியே!

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் இன்னும் சில கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அடுத்த ஆட்சியும் திராவிட மாடல் ஆட்சியே.

– சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி.

Updated at: January 22, 2026 at 1:12 PM

அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை!

உரிமையோடு போராடிய அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகளை அமைச்சர்கள் நடத்தினர். அரசு ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து மிகுந்த அக்கறை இருப்பதுபோல் அதிமுகவினர் தற்போது பேசி வருகின்றனர். ஆனால், இந்த அக்கறையெல்லாம் அதிமுக ஆட்சிக் காலத்தில் இல்லாமல் போனது ஏன்? டெஸ்மா (TESMA) சட்டத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. போராடிய அரசு ஊழியர்களை இரவோடு இரவாக நாங்கள் கைது செய்யவில்லை. யாரையும் சிறையில் அடைக்கவில்லை.

அரசு ஊழியர்கள் எந்தந்த வகையில் சம்பளம் வாக்குகிறார்கள் என கொச்சையாக அப்பதைய முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அதையெல்லாம் நாட்டுமக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை பழனிசாமிக்கு நினைவூட்டுகிறேன்!

“23 ஆண்டுகால பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். வரலாற்றில் இல்லாத வகையில், அரசு ஊழியர் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறைக்கே வந்து இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். அரசு ஊழியர்களின் அந்த மகிழ்ச்சியான தருணங்கள் பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் எதையாவது சொல்லி குறைகூறி வருகிறார்.”

- அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணிக்கு முதலமைச்சர் பதிலடி!

Updated at: January 22, 2026 at 1:12 PM

சட்டமன்றத்தில் குழப்பத்தை உண்டாக்க அதிமுக முயற்சி!

சட்டப்பேரவையின் நடைமுறைகளை மாற்றி, அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். நேரத்தை வீணடிப்பதற்காகவே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி, அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய சபாநாயகர் தனபால், ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும் போது கவன ஈர்ப்பு மற்றும் ஒத்திவைப்பு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

– சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு.

Updated at: January 22, 2026 at 1:12 PM

கிராமங்களின் பெயர்கள் தமிழிலேயே தொடர நடவடிக்கை!

“தமிழ்நாடெங்கும் கிராமங்களின் பெயர்கள் தமிழிலேயே தொடர நடவடிக்கை எடுக்கப்படும்!”

சட்டப்பேரவையில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ் மொழியில் இருந்த கிராமப் பெயர்கள் மாற்றப்பட்டு வருவதாக பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில்!

Updated at: January 22, 2026 at 1:12 PM

சட்டப்பேரவையின் நேரத்தை அதிமுகவினர் வீணடிக்க வேண்டாம்!

சட்டப்பேரவையில் அதிமுகவினர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நாளைய தினம் உரிய பதில் அளிக்கப்படும். சட்டப்பேரவையின் நேரத்தை அதிமுகவினர் வீணடிக்க வேண்டாம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Updated at: January 22, 2026 at 1:12 PM

திருப்பூர் மேம்பாட்டிற்கு தனிகவனம்!

திருப்பூரில் குப்பை கொட்டுவதற்காக அதிமுக ஆட்சியில் எந்த தொலைநோக்கு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் தான், நெருப்பெரிச்சல் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள குப்பைகளை பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரின் ஒவ்வொரு பிரச்சனையும் தனித்தனியாக கவனித்து தீர்வு காண திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாயப் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, ரயில்வே பிரச்சனை என அனைத்து முக்கியமான விஷயங்களுக்கும் தனிகவனம் செலுத்தி, நகரத்தை முற்றிலும் மேம்படுத்தி வருகின்றோம்.

- அதிமுக எம்.எல்.ஏ கே.என். விஜயகுமாருக்கு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில்!

Updated at: January 22, 2026 at 10:55 AM

குப்பையில் இருந்து மின்சாரம்!


சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூரிலும் இத்திட்டத்தை தொடங்க அரசு தயாராக உள்ளது. – சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு தகவல்!

Updated at: January 22, 2026 at 10:55 AM

22 லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளோம்!

“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 22 லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சீறிய முயற்சியால் சென்னையையொட்டிய பகுதிகளில் உள்ள 8,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. விரைவில் விடுபட்ட மக்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!”

– சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்!

Updated at: January 22, 2026 at 10:55 AM

குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை!

“தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திராவிட மாடல் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குற்றங்களை குறைத்து சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சிறைச்சாலைகளை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, குற்றம் இழைத்தவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கி நல்வழிப்படுத்தும் முயற்சியை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது. எனவே கலசப்பாக்கத்தில் உள்ள சிறைச்சாலை தற்போது அவசியமில்லை.”

– சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தகவல்!

Updated at: January 22, 2026 at 10:55 AM

கோவில்பட்டியில் ஆய்வு மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

Updated at: January 22, 2026 at 10:10 AM

ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்!

ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

Updated at: January 22, 2026 at 9:46 AM

கும்மிடிப்பூண்டி தொகுதி ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. - அமைச்சர் கே.என்.நேரு

Updated at: January 22, 2026 at 9:46 AM

தமிழ்நாடு சட்டமன்றம் 3வது நாள் அமர்வு தொடக்கம்!


தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

Updated at: January 22, 2026 at 9:36 AM

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வில், ஆளுநர் ஆர்.என். ரவி, வழக்கமான மரபின்படி ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்குகிறது.

Also Read: 🔴#LIVE : சட்டப்பேரவை கூட்டத்தொடர் : “இனி ஆளுநர் உரை இருக்காது” - முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம்!

Updated at: January 22, 2026 at 9:46 AM