Tamilnadu
“நான் ஏ.ஆர்.ரகுமானுடன் நிற்கிறேன்” : கனிமொழி எம்.பி ஆதரவு!
பாலிவுட் திரையுலகில் நிலவும் அதிகாரம் மற்றும் பாகுபாடு குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில், ”இந்தித் திரையுலகில் கடந்த 8 ஆண்டுகளில் அதிகார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. டைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் சென்றுள்ளது. மேலும் மதம் சார்ந்த அல்லது சமூக ரீதியான காரணங்களாலேயே தமக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.
இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ”தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் இந்தியராக இருப்பதையும், இங்குள்ள பன்முகத்தன்மையையும் பெருமையாகக் கருதுகிறேன்" என கூறி வீடியோ ஒன்றையும் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
இருந்தும் பா.ஜ.கவைச் சேர்ந்த கங்கனா ரனாவத், ஷோபா டே போன்றோர் ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நான் ஏ.ஆர். ரகுமானுடன் நிற்கிறேன். மதம், மொழி மற்றும் அடையாளங்களைக் கடந்து உலகளாவிய கலைத் தொண்டாற்றும் ஒரு கலைஞரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்குவது மற்றும் வெறுப்பைப் பரப்புவது மிகவும் கவலையளிக்கிறது
இத்தகைய தாக்குதல்கள் நடக்கும்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பது.வெறுப்புக்கும் பாரபட்சத்திற்கும் பலியாவதை விட, ரகுமான் போன்ற ஒரு மேதைக்கு நாடும் மக்களும் நன்றியுடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சியில் புதுப்பொலிவு பெற்ற 4000 திருக்கோயில்கள்” : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
-
திருச்சியில் 10 இலட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு!’ : தி.மு.க நிறைவேற்றிய 4 திர்மானங்கள் என்னென்ன?
-
“ஆளுநரின் மைக்கை அணைக்கவில்லை! அதன் அவசியம் எங்களுக்கு இல்லை!” : அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!
-
அரசுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி : CPI(M) செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!
-
ஓய்வுபெற்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி… காரணம் என்ன?