Tamilnadu
தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் : 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, மோகன்லால் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பண்பாடு கொண்டது தமிழ்நாடு என தெரிவித்தார். பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழ் திறைத்துறையில் முக்கிய பங்காற்றியதோடு புதிய மாற்றத்திற்கும் வழிவகுத்ததை சுட்டிக்காட்டிய அவர், தென்னிந்திய திரைத்துறையின் தலைநகரமாக சென்னை திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக கூறிய அவர், இதன் மூலம் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
Also Read
-
இவர்கள் சித்தாத்தம் இருக்கும் வரைம் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது : திவ்யா சத்யராஜ் அதிரடி பேச்சு
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!