Tamilnadu
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
”ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது. எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள். எங்களுடன் இருப்பவர்கள் நண்பர்கள்" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி ”பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. இவர்களின் மாயாஜால வித்தை எல்லாம் இங்கு எடுபடாது.
ஆளுநர் பதவி எல்லாம் எதிர்ப்பார்த்து காத்திருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் நானும் பா.ஜ.கவில்தான் இருக்கிறேன் என தனது இருப்பை காட்டிக் கொண்டு இருக்கிறார். த.வெ.கவில் இணைந்துள்ள செங்கோட்டையன் பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல்.
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது. எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள். எங்களுடன் இருப்பவர்கள் நண்பர்கள்" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நான் தி.மு.கவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே ஜெயக்குமார் பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லைபோல. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர திமுக ஆட்சி வேண்டும்” : சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
-
”ஓய்வின்றி உழைப்போம்.. திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்போம்” : 75,000 BLA2-க்களுடன் முதலமைச்சர் பேச்சு!
-
எதிர்க்கட்சியினரை முடக்க சதி : செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை - முதலமைச்சர் கண்டனம்!
-
“ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்” : நடிகர் சத்யராஜ் கடும் தாக்கு!
-
தொகுதிமறுவரையறை - டெல்லியைத் தோற்கடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி!