Tamilnadu
”ராஜேந்திர பாலாஜி பேச்சில் காமெடி இருக்கும்! உண்மை இருக்காது!” : அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, ஜெயராமபுரம் பகுதியில் திருவுருவச் சிலையுடன் கட்டப்பட்டு வரும் விடுதலை போராட்ட வீரர் பொல்லான் அரங்கத்தினை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ” எதிர்க்கட்சி தலைவராக நமது கழக தலைவர் இருந்தபோதே விடுதலைப் போராட்ட வீரர் பொல்லானுக்கு சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரான பிறகு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களுக்கு திருவுருவ சிலை வைக்க உத்தரவிட்டார்.
இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகளை இன்று நான் ஆய்வு செய்தனர். நவ.26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொல்லான் அவர்களின் சிலையை திறந்து வைக்க இருக்கிறார்.
மாநில அரசை விமர்சிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. அ.தி.மு.க ஆட்சியை விட, தி.மு.க ஆட்சியில் அதிக முதலீடுகள் வந்துள்ளது. ராஜேந்திர பாலாஜி பேசுவது காமெடியாக இருக்கும். ஆனால் அதில் உண்மை இருக்காது. 2026 தேர்தலில் தி.மு.க ஆட்சிதான் என்து அனைவரும் தெரிந்த ஒன்றே” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!