Tamilnadu
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?
திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். கல்லூரி படித்து வந்த இவர் கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்களது காதலில் கருத்து வேறுபோடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரிந்து விடலாம் என பிரவீன் குமாரிடம், இளம் பெண் கூறியுள்ளார்.இதற்கு அவர் நேரில் பேசி முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கும்பகோணத்தில் இருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் திருக்கண்ணமங்கை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
மேலும், தனது முடிவில் இளம் பெண் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த பீரவின் குமார் அருகே இருந்த குளத்தில் குதித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத இளம் பெண்ணும், காதலனை காப்பாற்ற குளத்தில் குதித்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!